2023 - 24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். வழக்கமாக பிரதமர் உள்பட முக்கிய மத்திய அமைச்சர்கள் தமிழ் குறித்தும், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மேற்கொள்காட்டி பேசுவது வழக்கம். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முந்தைய பட்ஜெட் உரைகளின்போது தமிழ் இலக்கியங்களை மேற்கொள்காட்டி பேசியுள்ளார்.
2019ல் தனது பட்ஜெட் உரையில் நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி விளக்கினார்.
Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே
2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்ற திருக்குறளை குறிப்பிட்டு பேசினார். இதேபோல இந்த முறை பட்ஜெட் தாக்கலின்போது திருக்குறள், பாரதியார் பாடல்கள் அல்லது ஏதேனும் ஒரு தமிழ் இலக்கியத்தில் இருந்து நிதியமைச்சர் மேற்கோள் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.