சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 27வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
Read more: ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் எத்தனை லிட்டர் பெட்ரோல், டீசல் கிடைக்கும்- லாபம் என்ன?
பெட்ரோல் வரியை, மாநில அரசு குறைக்க வேண்டும் என்று, மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவிட்டது என்று கூறி அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதை நம் தினமும் பார்த்து வருகிறோம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறிவிடக்கூடாது என்பதே வாகன ஓட்டிகளின் பிரார்த்தனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.