முகப்பு /செய்தி /வணிகம் / LPG விலை மாற்றம் முதல் கடன் வட்டி விகிதம் வரை... மார்ச் 1-ல் முதல் அதிரடி மாற்றங்கள்..!

LPG விலை மாற்றம் முதல் கடன் வட்டி விகிதம் வரை... மார்ச் 1-ல் முதல் அதிரடி மாற்றங்கள்..!

மார்ச் 1 முதல் மாற உள்ள பெரிய மாற்றங்கள்.

மார்ச் 1 முதல் மாற உள்ள பெரிய மாற்றங்கள்.

மார்ச் 1 புதன்கிழமை முதல் வங்கி கடனுக்கான வட்டி விகிதம், நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் மாற்றப்பட உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் மார்ச் 1, புதன்கிழமை முதல் வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிகள் சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். ஏனென்றால், இவை உங்களின் மாத பட்ஜெட்டை கடுமையாக பாதிக்கும்.

மார்ச் 2023 முதல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்களை இங்கே பார்க்கவும்…

EMI-யின் வட்டி அதிகரிக்கும்…

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதை தொடர்ந்து, பல வங்கிகள் MCLR விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது கடன் மற்றும் இஎம்ஐயை நேரடியாக பாதிக்கும். அதாவது, கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் மற்றும் EMI -களின் சுமை சாமானியனைத் தொந்தரவு செய்யலாம்.

CNG, LPG சிலிண்டர் விலை உயர்வு…

எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ( PNG ) எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும். கடந்த முறை எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், இம்முறை பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 1 முதல் 6% DA உயர்வு…

சமீபத்தில் வங்காள அரசு, அரசு அமைப்பு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி (DA) 6 சதவீத உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இது மார்ச் 1 முதல் அமலுக்கு வரும்.

DA -வில் 6 சதவீத உயர்வு என்பது டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்ட மூன்று சதவீத அதிகரிப்பு ஆகும். பிப்ரவரி 15 அன்று மாநில சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Also Read | ATM கார்டு மூலம் ரூ.10 லட்சம் வரை இலவச காப்பீடு.. க்ளைம் செய்வது எப்படி?

பான்-ஆதார் இணைக்க காலக்கெடு…

பான் (நிரந்தர கணக்கு எண்) வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை அபராத கட்டணத்துடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால் உங்கள் வங்கி அது மாறிவிடும்.

ரயில் அட்டவணையில் மாற்றங்கள்…

கோடை காலம் நெருங்கும் அதே நேரத்தில் இந்திய ரயில்வே குறிப்பிட்ட கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்யலாம். மார்ச் மாதத்தின் துவக்கத்தில், பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். ஊடக ஆதாரங்களின்படி, மார்ச் 1 முதல் 5,000 சரக்கு ரயில்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களுக்கான அட்டவணை மாற்றப்படலாம்.

First published:

Tags: Gas Cylinder Price, India post, LPG Cylinder, Post Office, Railway Budget