திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் , சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பஞ்சாப் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 2000-க்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வங்கியைப் பூட்டிவிட்டுச் சென்ற அதிகாரிகள் இன்று வழக்கம் போல் பூட்டைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது லாக்கர்கள் இருந்த அறையின் சுவரில் துளையிடப்பட்டு, லாக்கர்களை உடைத்துப் பணம், நகை கொள்ளை போனது தெரிய வந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற வெல்டிங் இயந்திரம், இரும்பு ராடு உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
ஐந்து லாக்கர்களிலிருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். 5 அல்லது 6 பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
வங்கி லாக்கரிலிருந்த பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் சோகத்துடன் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்காக ஒத்துழைத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க: பஞ்சாப் தேசிய வங்கியில் சுமார் ரூ.5 கோடி கொள்ளை...
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.