முகப்பு /செய்தி /வணிகம் / 78 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பை வழங்கக் போகும் டிசிஎஸ்!

78 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பை வழங்கக் போகும் டிசிஎஸ்!

டிசிஎஸ்

டிசிஎஸ்

தற்போது டிசிஸ் நிறுவனத்தில்  5,28,748 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ், காலாண்டில் ரூ. 46,867 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $ 7.6 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் அந்நிறுவனம் கையெழுத்திட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனம் அடுத்த ஆண்டு புதிதாக 78 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக  ராஜேஷ் கோபிநாத்தை மீண்டும் நியமித்துள்ளது.  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், 2022ம் ஆண்டு 40 ஆயிரம் பேரை வேலைக்கு சேர்க்கவுள்ளதாக டிசிஎஸ்  நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது கூடுதலாக 38 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 2022ம்  ஆண்டு 78 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கவுள்ளது.  இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில்  16,690 பேரை டிசிஎஸ் நிறுவனம் வேலைக்கு எடுத்தது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் புதிதாக 43 ஆயிரம் பேருக்கு அந்நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது. மேலும் 35 ஆயிரம் பேரை ஆண்டின் இரண்டாம் பாதியில் வேலைக்கு எடுக்கவுள்ளது.  தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளதால் அதிகமானோரை பணியில் சேர்க்க டிசிஎஸ் முனைப்பு காட்டி வருகிறது.

இதையும் படிங்க: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

தற்போது டிசிஸ் நிறுவனத்தில்  5,28,748 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ், காலாண்டில் ரூ. 46,867 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $ 7.6 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் அந்நிறுவனம் கையெழுத்திட்டது. எனினும் கடந்த ஆண்டை விட இது குறைவு ஆகும்.

கொரோனா பெருந்தோற்று காரணமாக  பெரும்பாலான நிறுவனங்கள் கிளவுட் முறைக்கு மாறின. வணிகத் தொடர்ச்சியை உறுதி செய்ய ஆன்லைன் முறைக்கு அவை மாறின.  இதனால், இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்தன. இதனால் தொழில்நுப்ட நிபுணர்களை நிறுவனங்கள் அதிகளவில் பணியில் அமர்த்தி வருகின்றன.

மேலும் படிக்க: ரிஸ்க் என்ற பேச்சுக்கே இடமில்லை... 5 லட்சம் பெற மிகச் சிறந்த வழி இதுவே!

First published:

Tags: IT Industry, Tata consultancy services, TCS