தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தினால் 3.5 சதவீதம் வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பொதுவாக மின்சார கட்டணம் கணக்கு எடுக்கப்பட்ட பிறகு 20 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்.
சில வாடிக்கையாளர்கள் பயணம் மற்றும் வெளியூர்களில் தங்கியிருப்பதால் முன்கூட்டியே மின்சார கட்டணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். இப்படி முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்துவார்களுக்கான வட்டி விகிதம் லாபம் வழங்கும் முறை 2019-2020 நிதி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
மின்சார கட்டணத்தைக் கூடுதலாகச் செலுத்துவது ஆன்லைனில் செய்ய முடியுமா அல்லது நேரில் தான் செய்ய வேண்டுமா என்ற விவரங்கள்குறித்து மின்சார வாரியும் எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.