மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 273.35 புள்ளிகள் என 0.69 சதவீதம் உயர்ந்து 40,105.50 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 85.90 புள்ளிகள் என0.72 சதவீதம் உயர்ந்து 12,031.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் மந்தமான சூழல் இருந்தாலும் இந்தியச் சந்தை உயர்வுடனே தொடங்கியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய உடன் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 273.35 புள்ளிகள் என 0.69 சதவீதம் உயர்ந்து 40,105.50 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 85.90 புள்ளிகள் என0.72 சதவீதம் உயர்ந்து 12,031.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐ.டி., டெக், டெலிகாம், நிதி, ஆற்றல், ஆட்டோமொபைல், மெட்டல், மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் அதிக லாபம் அளித்துள்ளன. மறுபக்கம் ரியாலிட்டி, கட்டுமானம் துறை சார்ந்த பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெக்ஸிகன் பொருட்கள் மீது வரியை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. மேலும் அரசு பத்திரங்களின் 10 ஆண்டு வருவாய் கடந்த 10 மாதங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்து 7.065 சதவீதமாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.14 புள்ளிகள் உயர்ந்து 69.76 ரூபாயாகவும் உள்ளது.
சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.86 சதவீதம் குறைந்து 66.87 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 3.92 சதவீதம் குறைந்து 56.59 டாலர் எனவும் விற்பனையாகி வருகிறது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.