எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலமாக இனி கடன் வாங்கி அதற்கு ஈ.எம்.ஐ கட்டலாம் தெரியுமா?
எஸ்பிஐ அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த வசதி நிச்சயமாக பயன் தரும். அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையைக் கடனாக பெற முடியும். மேலும் அதற்கு ஈ.எம்.ஐ கூட கட்டலாம். டெபிட் கார்டு வாயிலாகவே POS இயந்திரம் அல்லது ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளத்திலும் எஸ்பிஐ டெபிட் கார்டைப் பயன்படுத்தி கடன் வாங்கி கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த டெபிட் கார்டு மூலம் கடன் வாங்கி ஈ.எம்.ஐ ஆக மாற்றும் திட்டத்திற்கு எந்தவித செயல்பாட்டு கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம் தான். இந்த வசதியை பெற எவ்விதமான ஆவணங்களின் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருக்கும் பணமும் பிளாக் செய்யப்படாது. ஈ.எம்.ஐ தொகையை வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீங்கள் பெறும் கடன் தொகைக்கு எஸ்பிஐ வங்கி 2 வருட MCLR விகிதம் உடன் 7.50 சதவீதம் வட்டியை வசூலிக்கும். இந்த கார்டு வழியாக நீங்கள் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் அல்லது 18 மாதம் என்று 4 காலகட்டத்திற்கு ஈஎம்ஐ சேவை பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் முதலில் உங்கள் தகுதியை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதாவது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணில் இருந்து DCEMI என்று 567676 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். அனைத்து விபரங்களையும், தகுதிகளையும் தெரிந்துகொள்ள முடியும். வங்கி நிர்வாகம் மொத்த விவரங்களையும் உங்களுக்கு அனுப்பி விடும்.மேலும் இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.