சேமிப்பு கணக்கை திட்டமிட்டு தொடங்கினால் நல்ல லாபம் மற்றும் சலுகைகளையும் பெற வாய்ப்பு உண்டு. அதுக்குறித்து விரிவாக இன்று தெரிந்து கொள்ளலாம் .
சமீப காலமாக வங்கியை காட்டிலும் பொதுமக்களிடம் அஞ்சல் சேமிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல்வேறு வகையான சிறந்த சேமிப்பு திட்டங்கள், பணத்திற்கு பாதுகாப்பு. இதை எல்லாம் தாண்டி வட்டியும் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதே சமயம் பொதுமக்கள் சிறுவங்கிகள் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்த மறந்துவிடுகின்றனர். சேமிப்பு அல்லது முதலீடு என்றவுடன் அவர்களின் தேர்வு தனியார் வங்கிகள் அல்லது பொது வங்கிகளாக தான் இருக்கிறது. ஆனால் சிறு வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சேமிப்பி திட்டம் முதலீடு திட்டம், பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நல்ல வட்டி வழங்குகின்றன. கூடுதல் சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. அந்த வகையில் இன்று சிறுவங்கிகளில் நடைமுறையில் இருக்கும் சேமிப்பு கணக்கு விவரங்கள் மற்று சலுகைகள் குறித்து பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கில் தனியார் வங்கிகளை விட சிறு வங்கிகள் அதிக வட்டிகளை கொடுக்கின்றன. நல்ல வட்டி தரும் சில வங்கிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பற்றி தெரியுமா? இங்கு குறைந்த வட்டியில் கிராமப்புற மற்றும் நகர்புற மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை இந்த வங்கிய சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிகபட்சம் 7 விழுக்காடு வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஆகும்.
அடுத்தது, டி.சி.பி வங்கி . இங்கு
சேமிப்பு கணக்குகளுக்கு 6.65 விழுக்காடு வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லை இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது சலுகை முறையில் கடனும் வழங்கப்படுகிறது. அதே போல் உஜ்ஜீவன் வங்கியும் சேமிப்பு கணக்குகளுக்கு 7%
வட்டி வழங்குகிறது. கூடவே கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் சலுகை முறையில் கடன் வசதியையும் செயல்பாட்டில் வைத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.