சொந்த வீடு இல்லாதவர்கள் அரசு தரும் மிகச் சிறந்த வாய்ப்பான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் எப்படி வீடு கட்டலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சொந்த வீடு இன்று வரை பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. நகர்புற மக்களின் மிகப் பெரிய கனவு எது என்று கேட்டால் சொந்தமாக ஒரு வீடு என்று தான் சொல்வார்கள். வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பாருன்னு சும்மாவா சொன்னாங்க. வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கிடைக்கும் ஹோம் லோன்களை நம்பி தான் வீடு விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். ஆனால் இந்த வாய்ப்பு தகுதி, வருமானம் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளியோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும் தெரியுமா? அதுக்குறித்து இங்கே விளக்கமாக பார்க்கலாம்.
சொந்த வீடு இல்லாதவர்களும் , சேதமடைந்த வீடுகளில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வசிப்பவர்களுக்கு 25 சதுர மீட்டர் அளவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீடு வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் கிராமபுறங்களில் வசிப்போர் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் வீடு பெற தகுதி பெறுபவர்கள் 3% வட்டியில் மானியத்துடன் ரூ.70,000 வரை கடன் பெற முடியும். அதிகபட்ச அசல் தொகை ரூ.2,00,000 மற்றும் அதற்கான அதிகப்பட்ச இ.எம்.ஐ தொகை ரூ.38,359 ஆகும்.
இதற்கு விண்ணப்பித்தவர்கள் கிராம சபைகளால் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியலுக்கு செல்வார்கள். யாரெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் வீடு பெற தகுதியானவர்கள் என்று பார்க்கலாம் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பம், கூலி தொழில் செய்யும் நிலமற்ற குடும்பங்கள், ஆண் உறுப்பினர்கள் இல்லாத வீடுகள், வீட்டில் ஒருவர் கூட படிக்காத குடும்பங்கள் , பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் இந்த திட்டம் மூலம்
வீடு பெற தகுதியானவர்கள்.
போஸ்ட் ஆபீஸை தவிர வேறு எங்கும் இப்படி கிடைக்காது.. அதிக வட்டி.. அதிக வருமானம்!
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரத்தை பார்ப்போம். ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், MGNREGA-பதிவு செய்யப்பட்ட வேலை அட்டை, ஸ்வச் பாரத் மிஷன் எண் ஆகிய ஆவணங்களை முறையாக பெற்றுக் கொண்டு https://pmaymis.gov.in/ அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். கிராம சபை அதிகாரிகளால் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்படும் பட்டியல் வெளியிடப்படும். பெண் விண்ணப்பதாரர் என்றால் முன்னுரிமை வழங்கப்படும். அதே போல் மாநில
அரசுகள் நடத்தும் பொதுச் சேவை மையத்தைப் பார்வையிட்டு விண்ணப்பப் படிவத்தை ஜிஎஸ்டி மற்றும் ரூ.25 கொடுத்து நிரப்பி சமர்பிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.