முகப்பு /செய்தி /வணிகம் / பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனாவை வென்றோம் - நிர்மலா சீதாராமன் பாராட்டு

பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனாவை வென்றோம் - நிர்மலா சீதாராமன் பாராட்டு

பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி - நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Interview :கொரோனா காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது - நிர்மலா சீதாராமன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன் CNN-News18-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கொரோனா தொற்று காலங்கள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரங்களின் போது இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் நினைத்து நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும் என்றார்.

நியூஸ் 18 குழும முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான நேர்காணலில் பேசிய நிர்மலா சீதாராமன், “ கொரோனா காலத்தில் அனுபவத்தில் அடிப்படையிலே அனைத்தையும் செயல்படுத்தி வந்தோம். தற்போது அதனை திரும்பிப்பார்த்தால் அதை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனக் கூறினார்.

இந்த மாதிரி காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற எந்த வழிமுறையும் இல்லை. இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று எந்த உதாரணமும் இல்லை. இதுபோன்ற காலத்தில் இப்படிதான் செயல்பட வேண்டும் என எந்த சூத்திரமும் இல்லை. நாங்கள் எல்லோரிடமும் ஆலோசனைகளை கேட்டோம்.

கடினமான காலத்தில் நாட்டை வழிநடத்திய அனைத்து பெருமைகளும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். கொரோனா காலத்தில் எந்த ஆலோசனை கூட்டத்தையும் வேண்டாம் என மறுத்ததே இல்லை. இன்று வரை அவர் எந்த ஆலோசனை கூட்டத்தையும் வேண்டாம் எனக் கூறியதில்லை. கொரோனா காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இன்று வரை நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

First published:

Tags: Covid-19, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Modi, Nirmala Sitharaman, Union Budget 2023