முகப்பு /செய்தி /வணிகம் / விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை - வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தேதி குறித்து வெளியான தகவல்

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை - வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தேதி குறித்து வெளியான தகவல்

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11ஆவது தவணைத் தொகை இன்னும் சில நாட்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11ஆவது தவணைத் தொகை இன்னும் சில நாட்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. பணம் எப்போது செலுத்தப்படும் என்று மத்திய அரசு இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், அரசு வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களின்படி மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பணம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தில் பயனடையக் கூடிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 தவணைகளாக ரூ.6.000 பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2,000 பணம் செலுத்தப்படுகிறது.

முன்னதாக, பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 10ஆவது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. தற்போது தங்கள் வங்கிக் கணக்கில் 11ஆவது தவணைத் தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

எப்போது அறிவிப்பு வெளியாகும்?

விவசாயிகளுக்கு உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. அதே சமயம், கடந்த மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியது. அதன்படி இந்த ஆண்டிலும் மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!

 அதே சமயம், விவசாயிகள் தங்களுக்கான உதவித்தொகையை பெறுவதற்கு இ-கேஒய்சி அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த அப்டேட்டிற்கு மே 31ஆம் தேதி வரை காலக்கெடுவை மத்திய அரசு அண்மையில் நீட்டித்தது.

இ-கேஒய்சி எப்படி செய்வது?

ஆதார் கார்டு அடிப்படையில் ஓடிபி பெற்று இ-கேஒய்சி அப்டேட் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போதைய சூழலில், ஆதார் கார்டு பயன்படுத்தி ஓடிபி மூலமாக நீங்கள் இதை அப்டேட் செய்ய முடியாது.

நமது பயோமெட்ரிக் விவரங்களை உறுதி செய்வதன் மூலமாகத்தான் இ-கேஒய்சி அப்டேட் செய்ய முடியும். ஆகவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று, பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்து இதை செய்து கொள்ள வேண்டும்.

ALSO READ |  கஷ்டமே இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம்!

 பயனாளிகள் தவறான தகவல்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்திவிட வேண்டும். இதற்கு முன்பாக பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட இணையதளத்தில் இந்த விவரங்களை அப்டேட் செய்யும் வசதி இருந்தது.

First published:

Tags: PM Kisan, PM Modi