கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால், ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது.
இதனால் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள், ரூபாய் மதிப்பில் இதற்கான பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்தது முதலே எரிபொருட்களின் விலை உயர்ந்து வந்தன. அற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின. எரிபொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளன.
Must Read : ஊழியர்களின் ஊதியம் குறையும், பணி நேரம் மாறும்... ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்
இதற்கிடையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது, அதனைத் தொடர்ந்து 40ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.