யெஸ் வங்கியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் பாக்கி மட்டும் 550 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்னையால் பெரும் நிதிச்சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தது.
யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள சூழலில் யெஸ் வங்கியில் கடன் பாக்கி வைத்துள்ளோரை அமலாக்கத்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். இதன்படி, இன்று அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் ஆஜரானார்.
யெஸ் வங்கியில் பண மோசடி குற்றத்தில் நரேஷ் கோயலுக்குத் தொடர்பு உள்ளதா என்றதன் அடிப்படையில் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் நரேஷ் கோயல் யெஸ் வங்கியில் சுமார் 550 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட போதும் உறவினர் உடல்நிலை சரியில்லை எனத் தட்டிக்கழித்த நரேஷ் கோயல் இன்று விசாரணையில் பங்கெடுத்துள்ளார்.
மேலும் பார்க்க: கொரோனா பாதித்தவர்களுக்கு சி்றப்புக் கடன் - எஸ்பிஐ அறிவிப்பு உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.