பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் சமையல் எண்ணெய் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளால், பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளீட்டுச் செலவுகள் இதனால் உயரலாம். மேலும் இதன் தாக்கத்தால் பண வீக்கமானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான தட்டுப்பாட்டின் காரணமாகவும், மற்றும் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து வருவதை அடுத்தும், ஏப்ரல் 28 முதல் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேஷியா அரசு தடை செய்துள்ளது. இது தான் உலகிலேயே அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்ய கூடிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. அழகுசாதனப் பொருட்கள், சோப்புகள், ஷாம்புகள், நூடுல்ஸ், பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற பல தினசரி நுகர்வுப் பொருட்களைத் தயாரிக்க பாமாயில் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, பாமாயில் விலையில் ஏற்படும் எந்த உயர்வும் இந்தத் தொழில்களில் உள்ளீடு செலவுகளை அதிகரிக்க கூடும். இது குறித்து ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் தலைவர் சந்தோஷ் மீனா கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, உலக சமையல் எண்ணெய் சப்ளையில் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பாமாயில் மற்றும் சோயா எண்ணெய்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஏற்றுமதி தடை மற்றும் மலேசிய வரிகள் அதிகரிப்பு ஆகியவை பல சிக்கலை உருவாக்கி உள்ளன.
இதனால் பாமாயிலை அதிகம் நம்பி இருக்கும் HUL, நெஸ்லே, பிரிட்டானியா, கோத்ரேஜ், மேரிகோ போன்ற நிறுவனங்களை எதிர்மறையாக பாதிக்கும். இதன் மூலம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், சோப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவற்றால் விலை வாசி உயர கூடும் என்று அவர் தெரிவித்தார்.
Also Read : ஒரு மணி நேர கரண்ட் கட் ஆனா தவிக்கிறோமே... மின்சார வசதியின்றி மக்கள் வாழும் நாடு பற்றி தெரியுமா?
உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தியாளரான இந்தோனேஷியா, கடந்த வியாழன் முதல் ஏற்றுமதியை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் பாமாயில், சோயா ஆயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ராப்சீட் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து முக்கிய சமையல் எண்ணெய்களின் விலைகள் உயர்த்தப்படும் என்று ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் இந்த முடிவானது பாமாயில் கிடைப்பதை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தாவர எண்ணெய்களையும் பாதிக்கிறது என்று LMC இன்டர்நேஷனல் கமாடிட்டிஸ் கன்சல்டன்சியின் தலைவர் ஜேம்ஸ் ஃப்ரை மேற்கோள் காட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Also Read : கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.
முக்கியமாக விலையுயர்ந்த உணவுப் பொருட்களின் காரணமாக, இந்தியாவில் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.