ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதால் புதிதாக 3,500 பேருக்கு வங்கிப்பணி வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்தியாவில் அதீத வீழ்ச்சியை ரியால்டி துறை சந்தித்துள்ளது. ரியால்டி துறை என்பது வர்த்தகம், பங்குச்சந்தை, நிஃப்டி ஆகிய துறைகளை அடக்கியது. ஆனால், ரியால்டி துறை வீழ்ச்சி கிளை விரிவாக்கத்தை எந்தவிதத்திலும் தாக்காது என ஐசிஐசிஐ வங்கி புதிதாக 450 கிளைகளை தொடங்க உள்ளது.
இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் அனுப் பாக்சி கூறுகையில், “விரிவாக்கப் பணிகளில் வீழ்ச்சியின் தாக்கம் எதுவும் பாதிக்காது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவைகளால் ரியால்டி துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தத் துறையாக உள்ளது. மார்ச் 2020-க்குள் ஐசிஐசிஐ வங்கிகள் மொத்தம் 5,300 கிளைகள் கொண்டதாக வளரும். இதற்காக 3,500 பேரை பணி நியமனம் செய்ய உள்ளோம்.
வீழ்ச்சி நீடித்தாலும் இந்தத்துறையில் பொருளாதார வளர்ச்சி இன்னும் பாதாளத்துக்குச் செல்லவில்லை. 2020-ம் ஆண்டுடன் நின்றுவிடாமல் மீண்டும் 2021-ம் ஆண்டு முதல் கிளைகள் விரிவாக்கப் பணி தொடங்கும். தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் ஒரு கிளைக்கு 7 முதல் 8 பேர் வரையில் புதிதாக நியமிக்கபடுவார்கள். கிளைக்கு 70 பணியாளர்கள் என்ற நடைமுறையையும் அமல்படுத்த உள்ளோம்” என்றார்.
மேலும் பார்க்க: 'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்
நண்டு வளர்ப்பு: சதுரங்கவேட்டை சினிமா பாணியில் கோடிகளில் மோசடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.