முகப்பு /செய்தி /வணிகம் / Union Budget 2022 Highlights: மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

Union Budget 2022 Highlights: மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Union Budget 2022 Highlights: 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லா டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து இப்பக்கத்தில் உடனுக்கு உடன் அறிந்துகொள்ளலாம்.

*பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

*நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

*மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை ஆற்றி வருகிறார்.

* டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

*கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது- நிர்மலா சீதாராமன்

* ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

*கதிசக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

*அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்

*கடந்த பட்ஜெட்டின் முடிவுகளை விட சிறந்த வளர்ச்சி

*எல்ஐசியின் ஐபிஓ விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது

*PLI திட்டங்களுக்கு சிறந்த பதில் கிடைக்கும்

*2022-23ல் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 25,000 கி.மீ விரிவாக்கம் செய்யப்படும்.

* நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும்

* 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

* சிறு விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கான திறமையான தளவாடங்களை ரயில்வே உருவாக்கும். உள்ளூர் தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலிக்கு உதவ 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு'திட்டம் கொண்டுவரப்படும்.

* கோதாவரி- பெண்ணாறு, காவிரி -பெண்ணாறு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கப்படும்.

*ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்.

*ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் தொடங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை

*இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்.

*குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே Amrit Mahotsav நோக்கம்

*1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒரு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்

*திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்.

* பெண்கள் வளர்ச்சிக்காக மிஷன் ஷகி, மிஷன் வாத்சல்யா, போஷன் 2.0 ஆகிய முன்னெடுப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

* 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்கப்படும். One Class One TV Channel எண்ணிக்கை 12ல் இருந்து 200 தொலைக்காட்சி சேனல்களாக உயர்த்தப்படும்.

* சிறு நடுத்தர துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ. 50 ஆயிரம் அளவுக்கு விரிவுப்படுத்த அரசு திட்டம்

* 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும் .

*டிஜிட்டல் பேங்கிங் வசதி அனைவருக்கும் கிடைக்க 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகள் அமைக்கப்படும்.

*நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

*வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாயில் திட்டங்கள்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1486 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. எளிதாக தொழில் தொடங்க Ease of Doing Business 2.0 அறிமுகப்படுத்தப்படும்.

*பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 18 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*பொது போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத தூய்மையான போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

*ரூ. 44605 கோடி மத்திப்பிலான கென் - பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.

*5ஜி சேவையை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது

*பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும்.இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும்.

*வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு. மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டம்

*கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

*மெய்நிகர் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி விதிப்பு. மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்.

*மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்

*ஒப்பந்தங்கள் வாயிலாக கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்க பொது , தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்

* குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஓரளவு இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.

*மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம்

*குஜராத்தின் கிப்ட் சிட்டியில் சர்வதேச தீர்ப்பாயத்தை மத்தியஸ்த அமைப்பை உருவாக்க முடிவு

*மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை வளர்க்கவும் திட்டங்களை வடிவமைக்க சிறப்பு பணிக்குழு

*சுலபமான வாழ்க்கை எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம் ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்

*பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க 10 நாட்களுக்குள் 75% பில்லை பணமாக்கும் முறை உருவாக்கப்படும். இதற்காக காகிதமற்ற மின்னணு பில்களை அமைச்சகங்கள் ஏற்படுத்தும்

*கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்கு பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

*காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டம்

*உயர்திறன் மிக்க பாலிசிலிக்கான் உற்பத்தி செய்ய உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 19500 கோடி ஒதுக்கீடு

புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும்.

*கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று முறை குறைந்த பட்ச வரி விகிதம் 18.5-லிருந்து 15 சதவீதமாக குறைப்பு

*புதிய வருமான வரி படிவங்களை அடுத்த 2 மதிப்பீட்டு ஆண்டுக்கான படிவங்கள் சமர்ப்பிக்க அனுமதி

*அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 MMT கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

*மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

*நாட்டை நவீனப்படுத்தும் ஆற்றல் கொண்ட பசுமை எரிசக்தி & சுலபமான போக்குவரத்து முறைகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்திய தொழில்துறையை மாற்றக்கூடியதாகும்.

*ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது.

*நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது.

*மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு

*குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது, பட்டை தீட்டாத வைரத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைப்பு

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2022, Union Govt