குறிப்பிட்ட வருவாய் ஈட்டுவோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அரசே பிஎஃப் பணத்தை செலுத்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கக்கூடாது என மத்திய அரசு இன்று சில பொருளாதார திட்டங்களை அறிவித்தது.
இதன் அடிப்படையில் EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஊழியர் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே செலுத்துவிடுவதாக அறிவித்துள்ளது. இரு தரப்பின் சார்பிலும் தலா 12 சதவிகிதத்தை அரசே செலுத்திவிடும்.
இதற்கு குறிப்பிட்ட அந்த நிறுவனம் 100 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக அதில் பணியாற்றும் 90 சதவிகித ஊழியர்கள் 15 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களாய் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதி பணத்தை செலுத்திவிடும்.
மேலும் பார்க்க: ஏழை மக்களுக்கு உதவ ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு..! - நிர்மலா சீதாராமன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.