இந்தியாவில் பந்தன் வங்கி, டிசிபி வங்கி, ஆர்பிஎல் வங்கி, யெஸ் வங்கி போன்றவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான பிக்செட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதங்களை 4.90 லிருந்து 5 புள்ளிகளாக உயர்த்தியது. இதனை தொடர்ந்து பொதுவுடைமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில்கடன் என அனைத்து வகை கடன்களுக்கும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதோடு வங்கிகள் தங்களது சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கி ஆர்டி மற்றும் எப்டிக்கான வட்டி விகிதங்களையும் போட்டிப்போட்டு கொண்டு உயர்த்தி வருகிறது.
ஹோம் லோனில் வீடு வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் நோட் பண்ணுங்க!
குறிப்பாக சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு ஆர்டி மற்றும் எப்டியின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் வட்டி விகிதம் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
பந்தன் வங்கி:
தனியார் வங்கியான பந்தன் வங்கி ( Bandhan Bank) மற்ற வங்கிகளை காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. பொதுவாக மற்ற வங்கிகள் 0.50 சதவீதம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 கோடி ரூபாய்-க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ள நிலையில், புதிய வட்டி விகித மாற்றங்கள் ஜூலை 4ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அமலுக்கு வந்தது.
இதன்படி மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகை 3.75% முதல் 6.35 % வரை வழங்குகிறது. 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகை கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.24 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த மாற்றம் தற்போதைய பண வீக்க விகிதத்தை விட 0.21 சதவீதம் அதிகமாகும்.
சமையல் எண்ணெய்யின் விலை ரூ.10 வரை குறையுமா? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!
டிசிபி வங்கி( DCB bank):
இவ்வங்கி ரூபாய் 2 கோடிக்கு கீழே உள்ள நிலையான வைப்புகள் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகித மாற்றத்தை ஜூன் 22ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதன்படி 7 நாள்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான எப்டி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 5.30 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மேலும் 18 முதல் 120 மாதங்களில் மெச்சூரிட்டியடையும் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கும் முத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.10 சதவீதம் பெறுவார்கள் என வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு பணவீக்க விகிதத்தை விட 5 புள்ளிகள் அதிகமாகும்.
ஆர்பிஎல் வங்கி ( RBL Bank):
இவ்வங்கியில் ரூபாய் 2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை ஜூன் 8, 2002 அன்று முதல் உயர்த்தியது. அதன்படி, தற்போது 7 நாள்கள் முதல் 240 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகையை வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கவுள்ளது.
இதோடு 15 மாதங்களில் முதிர்ச்சிடையும் நிலையான வைப்புக்கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது பண வீக்கத்தை விட 0.11 சதவீதம் அல்லது 11 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
யெஸ் வங்கி (Yes Bank):
யெஸ் வங்கியில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 2 கோடி ரூபாய்-க்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை மாற்றியது.
அதன்படி, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் முதிர்வடையும் எப்டி கணக்கிற்கு 3.75 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
3 முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதிர்வுக்காலத்துடன் கூடிய வைப்புத்தொகைகளுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதம் வரை வழங்குகிறது. இது பணவீக்க விகிதத்தை விட 0.21 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Fixed Deposit, Savings