ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 சதவிகித பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், இது இரு தரப்புக்கும் வெற்றியாக இருக்கும் என்று வணிக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை வரலாற்றில் மிக முக்கியமாக குறிப்பிடும் நிகழ்வாக, ரிலையன்ஸ்
ஜியோவின் 9.9 சதவிகித பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் என்று முன்னணி சமூக வலைதளங்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது இரு தரப்புக்கும் வெற்றியாக இருக்கும் என்று வணிக தரகு நிறுவனங்கள் கூறியுள்ளன.
”கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், டிஜிட்டல் சந்தையில் இந்த இரு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. 900 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும்.
வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மெசேஞ்ஞர் சேவை மூலம் ரிலையன்ஸ் தனது வணிகத்தை மேம்படுத்தும்” என்று ஏஞ்சல்ஸ் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.