இபிஎஃப்ஓ- வின் அதிக ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவானது மே 3, 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் கிடைத்த தகவலின் படி மார்ச் 3, 2023 தான் பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பானது பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இபிஎப்ஃஓ (EPFO) பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு நான்கு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வெளியிட்டது. அதன்படி மார்ச் 3, 2023 ஆம் தேதி அந்தக் காலத்தெடுவானது முடிவடைகிறது. இதன்மூலம் அதிக ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 3 ஆக இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அதிக ஓய்வூதியத்தில் இணைவதற்கான கடைசி தேதி என்ன..?
தற்போது கிடைத்துள்ள அறிவிப்பின் படி இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அதிக ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மே 3, 2023 என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : ரூ.10000 சேமித்தால் ரூ.16லட்சம் வருமானம்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பில் சூப்பர் திட்டம்
யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணைய முடியும்
ஊதிய உச்சவரம்பு ரூபாய் 5,000 அல்லது 6,500 விட அதிகமாக தனது சம்பளத்திலிருந்து பங்களிப்பு செய்த ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இந்த திட்டத்தில் இணையலாம். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கும்போது (நிறுவனம் மற்றும் பணியாளர் மூலம்) கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தாதவர்களாக இருக்க வேண்டும். செப்டம்பர் 1, 2014க்கு முன்னரே உறுப்பினராக இருந்தவர்களும், அதன் பிறகும் உறுப்பினர்களாக தொடர்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது ?:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Epfo, Pension Plan