மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக முன்னிலை வகிக்கிறது. எனவே பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது.
காலை 9:05 மணி நிலவரத்தின் படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1.19 சதவீதம் உயர்ந்து 39,577.10 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 156.46 புள்ளிகள் உயர்ந்து 11,894.35 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் வங்கி, கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபில், ரியாலிட்டி, ஆற்றல், மின்சாரம், டெலிகாம், மெட்டல் துறை பங்குகள் லாபத்துடனும் ஐ.டி, டெக், பங்குகள் சரிவுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்:
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.68 சதவீதம் குறைந்து 70.99 டாலர் பேரல் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை 2.78 சதவீதம் குறைந்து 70.99 டாலர் பேரல் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.29 பைசா உயர்ந்து 69.45 ரூபாயாக உள்ளது.
நேற்றைய நிலவரம்:
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக இருந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்திருந்தது.
நேற்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 140.41 புள்ளிகள் என 0.36 சதவீதம் உயர்ந்து 39,110.21 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 28.80 புள்ளிகள் என 0.25 சதவீதம் உயர்ந்து 11,737.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.