இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் கிரெடிட் கார்டுகளை UPI-உடன் இணைக்க முன்மொழிந்துள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் பேமென்ட்ஸ் ப்ரோட்டோகாலுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது. கிரெடிட் ஸ்கோர் பிளேயிங் கார்டுகளை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸுடன் (UPI) ஹைப்பர்லிங்க் செய்ய முன்மொழியப்பட்டு உள்ளதன் மூலம் உள்நாட்டு மெய்நிகர் கட்டண முறையானது (homegrown virtual payment system) அதன் வளர்ச்சிக்காக மற்றொரு வாய்ப்பை பெற்றுள்ளது.
RuPay இந்தியாவின் உள்நாட்டு கார்ட் நெட்வொர்க் ஆகும். யூஸர்களின் டெபிட் கார்டுகள் மூலம் சேவிங்ஸ் அல்லது கரண்ட் அக்கவுண்ட்களை இணைப்பதன் மூலம் பரிவர்த்தனைகளை UPI எளிதாக்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒரு மாநாட்டில் கூறினார். RuPay கிரெடிட் கார்டுகளுடன் UPI பிளாட்ஃபார்மில் கிரெடிட் கார்டுகளை இணைக்க அனுமதிப்பது இப்போது முன்மொழியப்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
state bank : பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி உயர போகிறது! எஸ்பிஐ சொன்ன குட் நியூஸ்
நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) மூலம் RuPay ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய இந்த முன்மொழிவு UPI வழியாக ATM-ல் கேஷ்லெஸ் வித்டிராவல்ஸ் (cashless withdrawals) குறித்த சமீபத்திய RBI-ன் அறிவிப்புடன் இணைந்து, UPI பிளாட்ஃபார்மில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் UPI மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடு பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்..
மொத்த UPI பரிவர்த்தனைகள்:
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்த முடிவை அறிவிக்கும் போது, “இந்தியாவில் UPI-ஆனது சுமார் 26 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட யூஸர்கள் மற்றும் 5 கோடி வணிகர்களுடன் இயங்கி வருகிறது. மே 2022-ல் மட்டும் ரூ.10.4 லட்சம் கோடி நிதி பரிவர்த்தனைகள் சுமார் 594 கோடி UPI பரிவர்த்தனைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2021-ஆம் நிதியாண்டில் ரூ.41.04 லட்சம் கோடியாக இருந்த UPI அடிப்படையிலான பேமெண்ட்ஸ், 2022-ஆம் நிதியாண்டில் ரூ.84.16 லட்சம் கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
ரிட்டயர்மென்ட் காலத்துக்கு பிறகு ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? இதை செய்யுங்கள்!
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு:
ஏப்ரல் 2022 இறுதியில் நாட்டில் உள்ள மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 7.52 கோடியாக இருந்தது. இந்த மாதத்தில் ரூபே, விசா, மாஸ்டர்கார்டு உள்ளிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.6,565 கோடி மதிப்பிலான ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
கிரெடிட் கார்டுகளை UPI பிளாட்ஃபார்மில் இணைய அனுமதிப்பது யூஸர்களுக்கு கூடுதல் வசதியை வழங்கும் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் நோக்கத்தை மேம்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. தற்போது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமே தங்கள் ஏடிஎம்-களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும். இந்நிலையில் தான் தற்போது UPI இயங்குதளத்தில் சேவிங்ஸ் கார்டுகளை இணைக்க அனுமதிக்க ரிசர்வ் வங்கி இப்போது முன்மொழிந்துள்ளது. முதற்கட்டமாக RuPay savings playing card-கள் UPI பிளாட்ஃபார்முடன் இணைக்கப்படும். இது யூஸர்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ்களின் நோக்கத்தை மேம்படுத்தும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.