இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்குவதை தடுக்கவேண்டும் - நிதியமைச்சருக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்
இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் நேர்மையற்ற முறையில் கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 2:10 PM IST
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘இணைய விற்பனை நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் நெறியற்ற வகையில் பல்வேறு வங்கிகள் முழுவதுமாக கூட்டுவைத்துகொண்டு தொழில் செய்வதற்கு எதிராக உங்களுக்கு நாங்கள் கடிதம் எழுத தள்ளப்பட்டது மிக வேதனைக்குரிய ஒன்று. வங்கிகளின் கூட்டணி, புனிதமற்ற உறவு, வங்கிகளால் கடைபிடிக்கப்படும் அதிகபட்ச பாகுபாடான நடைமுறைகள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. உடனடி பணம் விவகாரத்தில் வங்கிகளின் செயல்பாடுகள் இந்திய மக்களுக்கு எதிரான பாகுபாடான நடவடிக்கையாகும். அது, அரசியலமைப்புச் சட்டம் 19, 301 மற்றும் ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான வெளிப்படையான செயல்பாட்டுக்கான பிரிவு 3(1) விதிகளுக்கு எதிரானது ஆகும்.
இந்த குறிப்பிட்ட வழக்கில், ஸ்டேட் பாங்க், பரோடா வங்கி, ஐ.சி.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோடேக் மகேந்திரா வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி, ஆர்.பி.எல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் புனிதமற்ற முறையில் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அவர்கள் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் மற்றும் பிற சலுகைகள் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆச்சர்யமாக, அதே குறிப்பிட்ட பொருள்களை இணையம் அல்லாத முறையில் பிற கடைகளில் அதே குறிப்பிட்ட வங்கியின் கார்டை பயன்படுத்தி வாங்கும்போது அந்த குறிப்பிட்ட வங்கிகள் கேஷ்பேக் உள்ளிட்ட பிற சலுகைகளை வழங்கவில்லை. இந்த நிறுவனங்களுடன் வங்கிகள் வைத்துள்ள கூட்டு, இணையம் அல்லாத நிறுவனங்கள் எளிதான முறையில் தொழில் செய்வதைத் தடை செய்கிறது. வங்கிகள் இந்தச் செயல்கள், அரசியலமைப்புச் சட்டம் 19, 301-வது பிரிவுகள் அனைத்து இந்திய குடிமகன்களும் தொழில் செய்வதற்கான உரிமையை மீறுகிறது.
வங்கிகள் உடனடி 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் வழங்குவது போட்டிச் சட்டம் 2002, பிரிவு 3-க்கு எதிரானது. இணைய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் பொருள்கள் வாங்கும்போது மட்டும் சலுகை வழங்குவது இந்தியாவுக்குள்ளான போட்டிக்கு எதிரானது. எந்த கொள்கையையும் வங்கிகள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது அது அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அநியாயம் செய்வது. அதன் காரணமாகத்தான் வங்கிச் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி வெளிப்படையான செயல்பாடு நடைமுறையைக் கொண்டுவந்தது. அதனை நீங்கள் உறுதி செய்யவேண்டும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். கிரெடிட் கார்டு செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு வங்கியும் சிறப்பான ஆவணப்படுத்தப்பட கொள்கையையும் வெளிப்படையான செயல்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதனால், இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நியாயமற்ற வகையில் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சிறு குறு தொழிலாளர்களுக்கு எதிராக தொழில் நடைமுறையை செய்கின்றன என்று நாங்கள் நம்புவதற்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன.
ரிசர்வ் வங்கிகள் ரெப்போ ரேட்டை குறைத்தாலும் கூட வங்கிகள் அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதில்லை. இந்த வங்கிகளுக்கு சாதாரண குடிமகன்களுக்கு 0.5 சதவீத சலுகைகள் கூட அளிப்பதில்லை. ஆனால், திடீரென்று பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக், தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. ஆச்சர்யமாக இதுவரையில், எந்த ஆடிட்டர் அல்லது இதற்கான அதிகாரி இந்த பாகுபாடுக்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளின் நேர்மையற்ற நடைமுறைக்கு எதிராக கேள்வியை எழுப்பியதில்லை.மேற்கண்ட சூழ்நிலைகள்தான் இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு கடிதம் எழுதத் தூண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உடனடியாக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து இந்த செயல்பாட்டை தடுக்க வேண்டும். இணைய வர்த்தக நிறுனவங்களுக்கு வங்கிகளால் அதிக அளவுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்த குறிப்பிட்ட வழக்கில், ஸ்டேட் பாங்க், பரோடா வங்கி, ஐ.சி.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோடேக் மகேந்திரா வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி, ஆர்.பி.எல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் புனிதமற்ற முறையில் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அவர்கள் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் மற்றும் பிற சலுகைகள் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆச்சர்யமாக, அதே குறிப்பிட்ட பொருள்களை இணையம் அல்லாத முறையில் பிற கடைகளில் அதே குறிப்பிட்ட வங்கியின் கார்டை பயன்படுத்தி வாங்கும்போது அந்த குறிப்பிட்ட வங்கிகள் கேஷ்பேக் உள்ளிட்ட பிற சலுகைகளை வழங்கவில்லை. இந்த நிறுவனங்களுடன் வங்கிகள் வைத்துள்ள கூட்டு, இணையம் அல்லாத நிறுவனங்கள் எளிதான முறையில் தொழில் செய்வதைத் தடை செய்கிறது. வங்கிகள் இந்தச் செயல்கள், அரசியலமைப்புச் சட்டம் 19, 301-வது பிரிவுகள் அனைத்து இந்திய குடிமகன்களும் தொழில் செய்வதற்கான உரிமையை மீறுகிறது.
வங்கிகள் உடனடி 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் வழங்குவது போட்டிச் சட்டம் 2002, பிரிவு 3-க்கு எதிரானது. இணைய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் பொருள்கள் வாங்கும்போது மட்டும் சலுகை வழங்குவது இந்தியாவுக்குள்ளான போட்டிக்கு எதிரானது.
அதனால், இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நியாயமற்ற வகையில் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சிறு குறு தொழிலாளர்களுக்கு எதிராக தொழில் நடைமுறையை செய்கின்றன என்று நாங்கள் நம்புவதற்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன.
ரிசர்வ் வங்கிகள் ரெப்போ ரேட்டை குறைத்தாலும் கூட வங்கிகள் அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதில்லை. இந்த வங்கிகளுக்கு சாதாரண குடிமகன்களுக்கு 0.5 சதவீத சலுகைகள் கூட அளிப்பதில்லை. ஆனால், திடீரென்று பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக், தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. ஆச்சர்யமாக இதுவரையில், எந்த ஆடிட்டர் அல்லது இதற்கான அதிகாரி இந்த பாகுபாடுக்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளின் நேர்மையற்ற நடைமுறைக்கு எதிராக கேள்வியை எழுப்பியதில்லை.மேற்கண்ட சூழ்நிலைகள்தான் இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு கடிதம் எழுதத் தூண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உடனடியாக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து இந்த செயல்பாட்டை தடுக்க வேண்டும். இணைய வர்த்தக நிறுனவங்களுக்கு வங்கிகளால் அதிக அளவுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்