பீகாரில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பாட்னாவில் உள்ள அரசின் கூட்டுறவு அங்காடியில் வெறும் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் அதை வாங்க கூட்டம் அலைமோதியது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கூட்டுறவு அங்காடியில் ஒரு கிலோ 35 ரூபாய் விலையில் ஒவ்வொருவருக்கும் தலா 2 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைநகர் பாட்னாவில் உள்ள கூட்டுறவு அங்காடியில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து 2 கிலோ வெங்காயம் வாங்கிச் சென்றனர். திருமண வீடுகளுக்கு அழைப்பிதழை கொண்டுவந்தால் 25 கிலோ வெங்காயம் மலிவு விலையில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.