பிரதமர் நரேந்திர மோடி இன்று (27.02.2023) விவசாயிகளுக்கு வழங்கும் கிசான் நிதியின் 13வது தவணையை விடுவிக்கிறார். சுமார் 8 கோடி விவசாய குடும்பங்களுக்கு 16 கோடி ரூபாய் நிதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் சுருக்கமான பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ.6000 தொகை வருடத்தில் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். 1.12.2018 ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 தவணைகளில் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று 13வது தவணை விடுவிக்கப்படவுள்ளது.
கிசான் நிதி வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுவது எப்படி?
கிசான் நிதியைப் பிரதமர் இன்று மாலை 3 மணி அளவிலேயே விடுவிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 செலுத்தப்படவுள்ளது.
https://pmkisan.gov.in/ என்ற இணையத்தளத்தில் கிசான் நிதி பெறுவதற்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். https://pmkisan.gov.in/beneficiarystatus.aspx என்ற இணையத்தளத்தில் விவசாயிகள் இதற்கான தகவலை சரிபார்த்துக்கொள்ளலாம். இதில் உங்கள் பெயர் இடம்பெற்று இருந்தால் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.2000 உதவித்தொகை செலுத்தப்படும்.
Also Read : PM Kisan | விவசாயிகளுக்கான ரூ.2,000 கிசான் நிதி.. இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி...!
மேலும் இன்று பிரதமர் மோடி இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகையை விடுவித்துத் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் உரையாற்றவுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.