பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் பிப்ரவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அதாவது பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தில் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்தின் 13வது தவணைக்கான விவசாயிகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Join Hon'ble PM's initiative to empower farmers!
Register for the PM-KISAN 13th installment release event via https://t.co/X4zgYs0sEb #PMKISAN #FarmersFirst pic.twitter.com/v4KaFqPV0Q
— Agriculture INDIA (@AgriGoI) February 25, 2023
விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை சுமார் 8 கோடி விவசாயிகளுக்குப் பிப்ரவரி 27 ஆம் நாள் 3 மணிக்குப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 13வது தவணைத் தொகை வெளியிடுவதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ரூ.2000 செலுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் நிதியை வழங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்து, விவசாயிகளிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள https://pmevents.ncog.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, PM Kisan, PM Modi