பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் சுருக்கமான பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ.6000 தொகை வருடத்தில் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13வது தவணையாக ரூ.2000, 8 கோடி விவசாயிகளுக்குப் பிப்ரவரி 27 ஆம் நாள் வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். 1.12.2018 ஆம் நாள் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வரை 12 தவணைகளில் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உதவித்தொகைக்கு நிலம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கணவர், மனைவி மற்றும் சிறு குழந்தைகள் உள்ள விவசாய குடும்பம் இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகையைப் பெறமுடியும். மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயக்குடும்பத்தினர் இத்திட்டத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களில் விவரங்கள் https://pmkisan.gov.in/ என்ற இணையத்தளத்தில் அறிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கிற்கு ரூ.6000 மூன்று தவணை முறையாகச் செலுத்தப்படும். தற்போது 13வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் பிப்ரவரி 27 ஆம் நாள் பிரதமர் மோடி மாலை 3 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை பணத்தைச் செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்து விவசாயிகளிடம் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmers, PM Kisan, PM Modi