மாருதி நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலை உயர்த்தப்படும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கார் தயாரிப்பிற்காகச் செலவுகள் அதிகரித்துள்ளதால் விலையை அதிகரிக்க முடிவு செய்ததாக மாருதி நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதன்படி திங்கள் கிழமை முதல் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை 1.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாடல் என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
தற்போதைய நிலவரப்படி, மாருதி சுஸுகியின் அரீனா போர்ட்ஃபோலியோ ஆல்டோ, ஆல்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ, டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா மற்றும் ஈகோ போன்ற கார்களைக் கொண்டுள்ளது. Nexa வரிசையில் Baleno, Ignis, XL6, Ciaz மற்றும் Grand Vitara ஆகிய மாடல்கள் உள்ளன.
மாருதி சுஸுகி தனது நெக்ஸா வரிசையில் இரண்டு புதிய கார்களைச் சேர்க்க உள்ளது, அவை ஜிம்னி 5-டோர் மற்றும் ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகும். இந்த இரண்டு புதிய வகைகளும் ஆட்டோ எக்ஸ்போ 2023 அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கார்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Maruti Suzuki