உலகின் மிகப்பெரிய பிராண்டுகளில், ஒவ்வொரு நாட்டுக்கும் தனி இடம் மற்றும் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஜப்பான் நாட்டில் ஹோண்டா மற்றும் சோனி என்ற இரண்டு பெருநிறுவனங்களுமே தங்கள் துறையில் முன்னோடியாக இருப்பவர்கள். வெவ்வேறு துறையில் சாதனைகள் செய்து வரும் இந்த இரண்டு ஜாம்பவான்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் இணைந்து செயல்பட இருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில் சோனியுடன் ஹோண்டா நிறுவனம் கைகோர்த்து கூட்டு முயற்சியில் EV துறையில் காலடி பதிக்கிறது.
கடந்த வெள்ளியன்று, ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம், சோனி க்ரூப் கார்ப்பரேஷனுடன் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இருந்து இரு நிறுவனங்களும் ஜாயின்ட் வென்ச்சரில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.
நுகர்வோர் மத்தியில் உயர்தர பொழுபோக்கு அம்சங்களுக்கு பெயர் பெற்ற சோனியின் மிகச்சிறந்த அனுபவம், நிபுணத்துவம், நெட்வொர்க், இமேஜிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றுடன் ஹோண்டாவின் தொழில்நுட்பம் மற்றும் மொபிலிட்டி வளர்ச்சியை இணைத்து புதிய தயாரிப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
இரண்டு பாரம்பரிய வணிக நிறுவனங்கள் ஒன்றாக இணைவது என்பது ஜப்பானில் மிகவும் அரிதான விஷயங்களில் ஒன்று. ஆனால், தற்போதைய நுகர்வோர் தேவைக்கேற்ப மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் காலத்தில், இது அத்தியாவசியமாகவே கருதப்படுகிறது.
பிளே ஸ்டேஷன், மியூசிக், என்று பொழுபோக்கு அம்சங்களில் உயர் தரமான சேவைகளை வழங்கி வரும் சோனி நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக் வாகனங்களில் ஆர்வம் இருப்பதாக கோடிட்டுக் காட்டியது. லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஒரு கேட்ஜட் கண்காட்சியில், சோனி ஒரு எலக்ட்ரிக் கார் கான்சப்ட்டை பற்றி விளக்கியது. மேலும், தங்களுக்கு ஒரு ஆட்டோமொபைல் பார்ட்னரை தேடுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் சோனி தலைவர் தெரிவித்தார். இதன் விளைவாக, இப்போது சோனியுடன் இணைந்துள்ளது ஹோண்டா.
பூமி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்ற சுற்றுசூழலை வாகன மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் அணைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும், சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க, தவிர்க்க ஸீரோ-எமிஷன் என்ற உறுதிமொழி ஏற்று, மாற்று எரிபொருள் பயன்பாட்டை முன்னிறுத்தி வருகின்றனர்.
Also read... உக்ரைன் மீதான போர் காரணமாக வாகன உற்பத்தியை நிறுத்தியுள்ள பிரபல நிறுவனங்கள்!
EV உற்பத்தியில் பல்வேறு புதிய நிறுவனங்கள் தோன்றினாலும், அவர்களால் டெஸ்லா போன்ற வணிக ஜாம்பவான்களுடன் போட்டியிட முடியுமா என்று தெரியவில்லை. எனவே, ஜப்பானில் தலைசிறந்த மற்றும் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா மற்றும் சோனியின் கூட்டு முயற்சி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டு வணிகத்தில், ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டாவின் உற்பத்தி ஆலையில் வாகனங்களின் உற்பத்தி மேற்கொள்ளப்படும். சோனி நிறுவனம், வாகனங்களுக்கான மொபிலிட்டி சேவைகள் தளத்தை வழங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.