சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்தல், கூற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட காரணிகளால் தற்போது உலகம் முழுவதும் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்கப்படுத்தப்படுகிறது. இதனால் முன்னனி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியாவிலும் முன்னனி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அரசுகளும் ஊக்கப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, எலக்ட்ரிக் வாகன தயாரி்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு இந்தியவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து வருகிறது.
மத்திய அரசின் கனரக தொழில்துறை மூலம் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் ஊக்கத்தொகையை தயாரிப்பு நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்தி விரிவு படுத்துவதற்காகவும், உற்பத்தியை பெருக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உரிய நோக்கத்திற்காக பயன்படுத்தால் வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் உண்மை இருந்தது தெரிய வந்ததையடுத்து இரண்டு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார். எலக்ட்ரிக் வாகன தயாரிப்பை ஊக்கப்படுத்துவதற்காக இதுவரை தயாரிப்பு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையைாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார்.
Also Read : புதிதாக 500 ஜெட் விமானங்களை ஆர்டர் செய்ய உள்ள ஏர் இந்தியா!
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஹீரோ, ஒகினாவோ, பென்லிங், ஒகாயா, ஜிதேந்திரா, கிரீவ்ஸ், ரிவோல்ட், கைனெடிக், ஆவான் மற்றும் லோஹியா உள்ளிட்ட 12 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டு உண்மையானால் கண்டிப்பாக விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய கனராக தொழில்துறை அமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை 30 விழுக்காடக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நாடாளுமனறத்தில் தெரிவித்துள்ள மஹேந்தரநாத் பாண்டே, அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் வெறும் 19 ஆயிரமாக இருந்த எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 2022 டிசம்பர் மாதம் நிலவரப்படி 4.4 லட்மாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இனி வரப்போகும் ஒவ்வொரு ஆண்டும் எலக்டரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்லும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike