அரியலூரில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குற்ற நுண்ணறிவு பிரிவு காவலர்கள் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகள் வேட்டையாடிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன், சுபாஷ், பாபு என்பதும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை ஆய்வு செய்தபோது உரிமம் இல்லாமல் பயன்படுத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த தா.பழூர் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் அவர்கள் வேட்டையாடிய 4 பறவைகளை பறிமுதல் செய்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்: கலைவாணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur, Crime News, Local News