ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. மறுமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அப்பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு இருவரையும் பிடித்து வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலினால் அங்கு சென்ற காவல்துறையினர் காவலர் வாசு மற்றும் அவரது மனைவியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Crime News, India