புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டை நிறைவுசெய்த சூழலில் அதனை இன்னும் சிறப்பாக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம் பெறும் என கூறினார். சுதந்திரத்தின் அடையாளமாக தமிழ்நாட்டில் தயாரான செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் வழங்கியது பற்றி பிரதமர் மோடி கேள்விப்பட்டதாக அமித் ஷா தெரிவித்தார். அந்த தங்க செங்கோலை சோழர்கள் கால நடைமுறையின்படி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக முன்னாள் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலை, தற்போது புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Vista, PM Narendra Modi