இந்தியாவில் 3 மாதங்கள் இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த ஆண்டு இயல்பை விட வெயிலில் தாக்கம் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் , இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏப்ரல்-ஜூன் மாதம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும் என்றும் தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும் என்றார்.
குறிப்பாக பிகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எச்சரித்தார்.
மேலும் ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம் .
1971 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கடந்த காலத்தைப் பார்க்கிறபோது, ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 39.2 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமான மழை நாட்டின் வடமேற்கு, மத்திய, தீபகற்ப பகுதிகளில் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Summer