முகப்பு /செய்தி /இந்தியா / மெசெஜ் மூலம் ஆசைவார்த்தை... லட்சக்கணக்கில் மோசடி செய்த தமிழக இளைஞர்கள்... டெல்லியில் சுற்றிவளைத்த போலீஸ்..!

மெசெஜ் மூலம் ஆசைவார்த்தை... லட்சக்கணக்கில் மோசடி செய்த தமிழக இளைஞர்கள்... டெல்லியில் சுற்றிவளைத்த போலீஸ்..!

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

டெல்லியில் தங்கி செல்போன் குறுஞ்செய்தி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட தமிழக இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Delhi, India

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சைபர் கிரைம் காவல் பிரிவில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து தனக்கு லோன் தருவதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, முன்பணமாக சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வழங்கி மோசடியில் சிக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

போலீசார் விசாரணையில், மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெல்லி விரைந்த தனிப்படை, ரகுபீர் நகரில் தங்கியிருந்து மோசடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன், துரைமுருகன் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய மூவர் மோசடியில் ஈடுபட்டு தெரியவந்தது.

இதையும் படிக்க :  நிர்வாணமாக்கப்பட்ட காதலன்... காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் கொடூரம்..!

அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அணுகி, அதற்கு பதிலளிப்பவர்களிடம் ஆசை வார்த்தை கூறி முன்பணம் பெற்று மோசடி செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் இந்த கும்பல் 50க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோல் பணம் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

First published:

Tags: Crime News, Cyber crime, Delhi, Online crime, Youngster