ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வாங்க தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கான பிரத்யேக பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையில்லா சான்று கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையிட்டார்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு அனுமதி வழங்குவது தேசிய ஹெரால்டு வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் தரப்பு வழக்கறிஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹெரால்டு வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதே, ராகுல் காந்தி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் படிக்க... வெப்ப அலை ஓய்ந்தது... வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்... வானிலை அப்டேட்..!
இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Passport, Rahul Gandhi, Subramaniyan swamy