முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்ற கணவர்... அடித்தே கொன்ற பெண் வீட்டார்... அதிர்ச்சி சம்பவம்..!

மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்ற கணவர்... அடித்தே கொன்ற பெண் வீட்டார்... அதிர்ச்சி சம்பவம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்றவரை பெண் வீட்டார் அடித்தே கொன்ற அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சைனி. 36 வயதான இவருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அம்ரீன் என்ற பெண்ணுக்கும் 2021இல் திருமணம் நடைபெற்றது. சைனியின் மனைவி அம்ரீன் மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா பகுதியைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணிக்காக சைனி அந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இருவரின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அம்ரீன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு ஜெய்பூரில் வாழத் தொடங்கினார். தங்கள் மகளை காணவில்லை என்று அம்ரீன் வீட்டார் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அம்ரீன் மற்றும் சைனியிடம் விசாரணை நடைபெற்றது. தனது விருப்பத்தின் பேரில் தான் சைனியை திருமணம் செய்துகொண்டேன் என அம்ரீன் தெரிவித்தார். தொடர்ந்து தம்பதி இருவரும் ராஜஸ்தானில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்னர் அம்ரீன் தனது பெற்றோரை பார்க்க மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பின்னர், அவர் வீடு திரும்பில்லை. இதனால் கவலை அடைந்த சைனி அம்ரீனை பார்க்க அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது மகளை அனுப்ப முடியாது எனக் கூறி சைனியை அம்ரீன் வீட்டார் தாக்கியுள்ளனர். வருத்தத்துடன் அவர் ஊர் திரும்பிய நிலையில், மே 13ஆம் தேதி மீண்டும் சைனி தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார்.

இம்முறை அம்ரீனின் தந்தை, அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து சைனியை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சைனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்தது. சம்பவம் தொடர்பாக சைனியின் சகோதரர் கந்த்வா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்...!

top videos

    அதன்பேரில் அம்ரீனின் சகோரர் சல்மான், தாய் முன்னிபாய், தந்தை மும்தாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. சைனி வேறு மதத்தவர் என்பதால் அம்ரீன் வீட்டில் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என சைனியின் சகோதரர் கிஷோர் சைனி தனது புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    First published:

    Tags: Crime News, Murder, Rajasthan