முகப்பு /செய்தி /இந்தியா / மிளகாய் சாகுபடியில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்!

மிளகாய் சாகுபடியில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்!

பரத்பூர் மிளகாய் சாகுபடி

பரத்பூர் மிளகாய் சாகுபடி

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள புசாவர் பகுதியில் மிளகாய் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

  • Last Updated :
  • Rajasthan, India

நாட்டில் அதிகளவிலான மக்கள் விவசாயம் அதை சார்ந்த தொழில்களையே வேலை வாய்ப்பிற்கு நம்பியுள்ளனர். இருப்பினும் கடந்த தலைமுறையைக் காட்டிலும் தற்போதைய தலைமுறையில் விவசாயத்தை விட்டு மற்ற வேலைக்கு செல்வது வெகுவாக அதிகரித்து வருகிறது. அதற்கான உழைப்பு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போவதே இதற்கு காரணம்.

மேலும் விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கூட, இன்றைய காலகட்டத்தில் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க பாரம்பரிய விவசாயத்திற்கு பதிலாக பணப்பயிர்களை ஊக்குவிக்கின்றனர். இவ்வாறு ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள புசாவர் பகுதியில் மிளகாய் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புறங்களில் மிளகாய் அதிகளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள விவசாயிகள் பல ரக மிளகாய் செடிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாயத்தில் அதிக மகசூல் மற்றும் இரட்டிப்பு வருமானம் பெற விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர்.

மேலும், இந்த பகுதியில் பெரிய ஊறுகாய் தொழிற்சாலைகள் இருப்பதால், மிளகாய் நேரடியாக பண்ணையிலேயே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இங்கு மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் முன்பதிவு செய்து மிளகாய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சில விவசாயிகள் சிறப்பான முறையில் பயிரிட்டு மிளகாய் சாகுபடி மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதித்து வருகின்றனர். இங்கு சுமார் 100 ஹெக்டேர் நிலத்தில் மிளகாய் சாகுபடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தங்கள் சாகுபடி விவரம் குறித்து விவசாயி ஜமுனா லால் மீனா கூறுகையில், "எங்கள் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால் இந்த விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கவில்லை. ஒரு நாள், பரஸ்பர ஆலோசனையின் பேரில் நாங்கள் மிளகாய் பயிரிடும் முடிவுக்கு வந்தோம். ஜவ்வரிசி, கந்தூரி, அர்கா, மேகனா, காசி, சுர்க் உள்ளிட்ட பல வகையான மிளகாய் வகைகளை விவசாயிகள் தயார் செய்து விவசாயம் செய்ய தொடங்கினோம்" என்றார்.

இந்த விவசாயத்தில் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இரட்டிப்பு லாபமும், அமோக மகசூலும் பெறப்பட்டு வருகிறது. இயற்கை உரத்தில் இருந்து விளைவிக்கப்படும் மிளகாயின் சுவை வித்தியாசமானது என்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் உள்ள ஜக்ஜீவன்பூர், சிராஸ், பிரேம்நகர், ஹிசம்தா, பல்லப்கர், துண்டபாரு, கமல்புரா போன்ற பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சாகுபடி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

top videos

    புசாவர் பகுதியில் அதிக அளவில் ஊறுகாய் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், இங்குள்ள ஊறுகாய் நாட்டிலேயே பிரசித்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், உள்ளூர் நிறுவனங்களுடன், வெளி நிறுவனங்களும் விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, பண்ணையில் இருந்தே மிளகாயை கொள்முதல் செய்கின்றன. ஊறுகாயில் மிகவும் சுவையாக இருக்கும் இங்கு மிளகாய் காரமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.தரமான இந்த மிளகாய் கொள்முதல் விலை கிலோவுக்கு 40 முதல் 80 ரூபாய் வரை உள்ளதால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

    First published:

    Tags: Farmers, Green Chilli, Rajasthan, Success