முகப்பு /செய்தி /இந்தியா / ராகுலுக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுமா...? ஏப்ரல் 20ல் தீர்ப்பு வழங்குகிறது சூரத் நீதிமன்றம்..!

ராகுலுக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுமா...? ஏப்ரல் 20ல் தீர்ப்பு வழங்குகிறது சூரத் நீதிமன்றம்..!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஏப்ரல் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கில், ராகுல் காந்தி தாக்கல் செய்த இடைக்கால மனு மீது ஏப்ரல் 20 ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மாதம் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அதில், தனது சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

top videos

    இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. ராகுலின் மேல்முறையீடு மனு குறித்து குஜராத் அரசு மற்றும் மனுதாரர் பதிலளிக்க ஏற்கெனவே சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Narendra Modi, Rahul Gandhi