ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு அவசர கதியில் பதவி உயர்வு வழங்கியது குறித்து குஜராத் மாநில தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அம்மாநில அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து குஜராத் நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சீனியாரிட்டியை முறையாக பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதமானது என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi, Supreme court