நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். காலை 7.30 மணியளவில் தொடங்கிய முதற்கட்ட திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சர்வமத பூஜையுடன் நிறைவுபெற்றது.
தொடர்ந்து 2-ம் கட்ட நிகழ்வு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி, சாவர்க்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடியை, எம்.பிக்கள் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.
இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டதன் பின்னணி குறித்து மக்களவையில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களை துணை சபாநாயகர் இணைந்து தபால் தலை மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.75 நாணயத்தையும் மக்களவையில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, Parliament, PM Modi