முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா.... ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா.... ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

New parliament | காலை 7.30 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் முதற்கட்ட நிகழ்வு காலை 9.00 மணியளவில் நிறைவடைந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். காலை 7.30 மணியளவில் தொடங்கிய முதற்கட்ட திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சர்வமத பூஜையுடன் நிறைவுபெற்றது.

தொடர்ந்து 2-ம் கட்ட நிகழ்வு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி, சாவர்க்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடியை, எம்.பிக்கள் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.

இதையும் படிங்க | புதிய நாடாளுன்ற திறப்பு விழாவில் பிரிஜ் பூஷண் பங்கேற்பதா? - மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவேசம்

இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டதன் பின்னணி குறித்து மக்களவையில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களை துணை சபாநாயகர் இணைந்து தபால் தலை மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.75 நாணயத்தையும் மக்களவையில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

First published:

Tags: Modi, Parliament, PM Modi