முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் : ஒருவர் கைது

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் : ஒருவர் கைது

குற்றவாளி உருவபடம்

குற்றவாளி உருவபடம்

கேரளாவில் ஓடி கொண்டிருந்த ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியை கண்ணூரில் போலிசார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Kerala, India

ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது இரண்டு பாட்டில் பெட்ரோல் ஊற்றி மர்மநபர் ஒருவர் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரயில் பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில், ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், தீக்காயம் அடைந்த பயணிகளை 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவான மர்ம நபரை போலிசார் தேடி வந்தனர்.

இதையும் படிக்க : Video : திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நடிகை ஜான்வி கபூர்

இதற்கிடையே, நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரின் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் கண்ணூர் மட்டன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்நிலையில், இந்த இதுகுறித்த விசாரணையில்  முஹம்மது ஷஹரூக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோழிக்கோடு கட்டட கட்டுமான தொழிலாளி எனவும், இவர் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Fire accident, Kerala, Train Accident