கொரோனா தடுப்பூசி தோல்வியடைந்தால் அதற்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், வெற்றி பெற்றால் அதற்கு விஞ்ஞானிகளே பொறுப்பு என்று பிரதமர் மோடி கூறியதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க் நடத்திய தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது- புதிய இந்தியா உருவாகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு குடிமக்கள் இது என்னுடைய அரசு என்று மத்திய அரசை கொண்டாடுகின்றனர்.
கொரோனாவுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டிருந்தபோது, தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வழக்கமாக ஒரு தடுப்பூசியை ஆய்வு செய்து சந்தைக்கு கொண்டு வருவதற்கு 15 ஆண்டுகள் வரை ஆகும். அதே நேரம் சந்தையில் இந்த தடுப்பூசியின் விலை அதிகமாக இக்கும். ஆனால் அந்த சவால்களை எல்லாம் சிறப்பாக எதிர்கொண்டு பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிகளை சந்தைப் படுத்தினார். இதெல்லாம் சாத்தியமா என்று விஞ்ஞானிகள் பிரதமர் மோடியிடம் கேட்டனர். ஆனால் அவரோ தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் தடுப்பூசிகளை உருவாக்குங்கள் என்றார்.
கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் தவறு ஏதும் நடந்தால் அதற்கு தானே பொறுப்பு ஏற்பதாக கூறிய மோடி, வெற்றி பெற்றால் அதற்கான பாராட்டை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். உலகத்திற்கு கொரோனா தடுப்பூசி 2020, டிசம்பர் 20 ஆம் தேதி கிடைத்தது. இந்தியா ஜனவரி 16, 2021 அன்று உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விட்டது. அந்த சமயத்தில் பிரதமர் மோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் மருந்து கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். நிச்சயமாக இந்தியாவால் உலக நாடுகளுக்கு கொரோனா மருந்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்று பிரதமர் மோடியும், நானும் நம்பினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA