முகப்பு /செய்தி /இந்தியா / “ஹெச்ஐவி பாதிப்பு... உடலுறவு இல்லை...”- காதலியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்..!

“ஹெச்ஐவி பாதிப்பு... உடலுறவு இல்லை...”- காதலியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்..!

சரஸ்வதி - மனோஜ்

சரஸ்வதி - மனோஜ்

இளம்பெண் கொலை வழக்கில் கைதான மனோஜ் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னரால் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஷ்ரத்தா வாக்கர் படுகொலை பணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை அருகே உள்ள மிரா ரோடு பகுதியில் உள்ள வீட்டில் மனோஜ் சானே என்ற 56 வயது நபரும் சரஸ்வதி வைத்தியா என்ற 32 வயது பெண்ணும் லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தான் மனோஜ் தனது பார்ட்னர் சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்ததுடன், உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும் சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைதான மனோஜ் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி, சரஸ்வதியின் பெற்றோர் அவர் குழந்தையாக இருக்கும் போதே பிரிந்துள்ளனர். சரஸ்வதி தனது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளில் தாய் மரணமடையவே ஆதரவற்றோர் இல்லத்தில் அவர் வாழத் தொடங்கினார். பள்ளிப்படிப்பை அங்கு முடித்த சரஸ்வதி, 18 வயதுக்குப் பின் அங்கிருந்து வெளியேறி முதலில் சகோதரி வீட்டில் 4 ஆண்டுகள் வசித்துள்ளார்.

அதன் பின்னர் தான் மும்பை வந்த சரஸ்வதி அங்கு மனோஜை சந்தித்துள்ளார். வேலை தேடி கஷ்டப்பட்ட காலத்தில் சரஸ்வதிக்கு மனோஜ் பல உதவிகளை செய்துள்ளார். வேலை, வீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தந்த மனோஜ் சிறித காலம் கழித்து தனது வீட்டிலேயே தங்கிக்கொள்ளுமாறு கூறி அழைத்து சென்றுள்ளார். இந்த காலத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து கோயிலுக்கு சென்று மாலை மாற்றியுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ளவில்லை.

தனது படிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை எடுக்க அவ்வப்போது ஆசிரமத்திற்கு செல்லும் சரஸ்வதி அங்குள்ளவர்களிடம் மனோஜை தாய் வழி மாமா என்றும் இவர் வீட்டில் தான் வசிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் மும்பையில் பெரிய துணி மில் முதலாளி பெரிய பணக்காரர் என பொய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜூஸில் மயக்க மயக்க மருந்து.. நண்பனுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

மேலும், இந்த நிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மனோஜ், தனக்கு எச்ஐவி நோய் இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக தங்களுக்குள் பாலியல் உறவு ஏதும் வைத்துக்கொள்ளவில்லை என்றுள்ளார். தனக்கு இந்த நோய் விபத்து ஒன்றில் ரத்தம் மாற்றும் போது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து பரவி விட்டது என போலீசாரிடம் மனோஜ் வாக்குமூலம் தந்துள்ளார். தனக்கு எச்ஐவி நோய் பரவியது குறித்து மனோஜ் கூறும் வாக்குமூலங்களை போலீசார் சந்தேக கண்ணுடன் பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை திசை திருப்ப அவர் ஏதேனும் கட்டுக்கதைகளை வாக்குமூலங்களில் திணிக்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Maharashtra