நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி ஒன்று, 4 குட்டிகளை ஈன்றது.
இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் அழிந்து விட்டதை அடுத்து, அதனை மீள் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன் படி, ஆப்ரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 2 கட்டங்களாக 20 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.
Congratulations 🇮🇳
A momentous event in our wildlife conservation history during Amrit Kaal!
I am delighted to share that four cubs have been born to one of the cheetahs translocated to India on 17th September 2022, under the visionary leadership of PM Shri @narendramodi ji. pic.twitter.com/a1YXqi7kTt
— Bhupender Yadav (@byadavbjp) March 29, 2023
அதில், பெண் சிவிங்கிப்புலி ஒன்று, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தது. இந்நிலையில், ஒரு சிவிங்கிப்புலிக்கு 4 குட்டிகள் பிறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 4 குட்டிகளின் வீடியோவை மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தற்போது இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.