இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது. விவகாரத்து கோரியவர்கள் காதல் திருமணம் செய்தது விசாரணையின் போது தெரியவந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காதல் திருணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக கூறினர். இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்க முயற்சித்தனர்.
மேலும் படிக்க... 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு... ரிசல்ட் பார்ப்பது எப்படி?
ஆனால், சமரசத்திற்கு கணவர் உடன்படவில்லை. இந்நிலையில், விவாகரத்து கோருபவர்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போது, இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Divorce, Love marriage, Supreme court