முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டில் இனி மோடி அலை அல்ல... எதிர்கட்சிகள் அலை தான் - சஞ்சய் ராவத் உற்சாகம்

நாட்டில் இனி மோடி அலை அல்ல... எதிர்கட்சிகள் அலை தான் - சஞ்சய் ராவத் உற்சாகம்

சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்

நாட்டில் இனி மோடி அலை அல்ல, எதிர்க்கட்சிகளின் அலை தான் வீசப்போகிறது என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Maharashtra, India

கர்நாடகாத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியாகின.

மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தோல்வியை, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அக்கட்சியினர் மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சியினரும் பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் முன்னணி தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸை பாராட்டியும், தோல்வி அடைந்த பாஜகவை கடுமையை விமர்சித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் பொதுமக்களால் சர்வாதிகாரம் வீழ்த்தப்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.

காங்கிரஸ் வெற்றி மூலம் அனுமார் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருக்கிறார் என்றும் பாஜகவின் பக்கம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. பாஜக தோல்வி அடைந்தால் மாநிலத்தில் கலவரம் வரும் என்றார். ஆனால் கர்நாடகா அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மக்களவையில் என்ட்ரி... ஆம் ஆத்மி பிடிக்குச் சென்ற 24 ஆண்டு கால காங்கிரஸ் கோட்டை

top videos

    நாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது. இனி எதிர்க்கட்சிகளான எங்கள் அலை மட்டுமே வீசும். 2024 தேர்தலுக்கான எங்கள் பணிகள் தொடங்கிவிட்டன. சரத் பவார் தலைமையில் இன்றே 2024 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Karnataka Election 2023, PM Modi