முகப்பு /செய்தி /இந்தியா / மோடி பெயர் விவகாரம்... குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு..!

மோடி பெயர் விவகாரம்... குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு..!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Gujarat, India

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், ராகுல் காந்தி எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனிடையே தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தார்.

இதையும் படிங்க; இறந்த மகளின் உடலுடன் நாள் கணக்கில் தங்கியிருந்த பெண்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி

top videos

    இதனை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனது அரசு குடியிருப்பையும் ராகுல் காந்தி காலி செய்தார். அவதூறு வழக்கில் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்த ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

    First published:

    Tags: Gujarat, Rahul Gandhi