முகப்பு /செய்தி /இந்தியா / கேரளா அட்டப்பாடி இளைஞர் மது கொலை வழக்கு... குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை..!

கேரளா அட்டப்பாடி இளைஞர் மது கொலை வழக்கு... குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை..!

ஆதிவாசி கொலை

ஆதிவாசி கொலை

Tribal murder case judgement | கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் பழங்குடியின இளைஞர் மது அடித்துக்  கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலத்தின் அட்டப்பாடி பகுதியில் கடந்த 2018 பிப்ரவரி 22 அன்று பழங்குடியின  இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து கொன்றது.

கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து உள்ளது. இதில் அனீஷ், அப்துல் கரீம் ஆகிய 2 பேரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ALSO READ | “ஆடைகளை கழற்றி ஆணுறுப்பில் தாக்கினர்...” - பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் புதுமாப்பிள்ளை பகீர் பேட்டி..!

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி 14 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மன்னார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதினாறாவது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

First published:

Tags: Crime News, Judgement, Kerala